தந்தை இட்ட வித்துடன்
தாய் படைத்த மேனியின்
இப்பிறவி கண்ட பயனை
நான் என்று கண்டறிவனோ
மூடர் என்று நீக்கிய
மாந்தர் இன்றெந்தன் முன்
வெற்றி கொண்டு சீண்டினார்
காலம் உன்னை நோவதோ
சித்த சுத்தி தீட்டியே
கற்ற வித்தை யாவையும்
ஒன்று சேர்த்து கட்டுவாய்
நல்ல வித்து காணவே
உலக ஞானம் காட்டிட
வெற்றி என்னும் கிண்ணத்தில்
வல்லமையை ஊட்டி விட
என்ன விலை கேட்கிறாய்
தயார் நிலையில் இருக்கிறேன்
சொக வாழ்வு பொதுமே
சோர்ந்து சோர்ந்து தேய்ந்திட
நானும் மெழகுவத்தியே ஆனால்
ஜொதி மட்டும் இல்லையே
காலம் உன்னை கேட்கிறேன்
என்று விடியல் காட்டுவாய்
நேரம் இங்கு இல்லையே
பொருமை யாவது தந்திடாய்
காம கோப தாபமும்
ஞானம் கொண்டு கட்டியும்
மாயை இன்னும் போகல
இன்னும் என்ன செய்யவோ
தேக நாடி தளர்ந்தபின்
வாள் எடுத்து போரிட
காலம் வைத்த சாபமாய்
நோகடிக்க எண்ணமோ
என்ன என்ன செய்வது
நின்று கொல்லும் தெய்வமும்
எந்தன் கூட இல்லையே.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment